Monday, January 31, 2011

நீயன்றி....!





காத்திருப்பின் நொடிமுள்ளில்
காலிடறி வீழ்ந்ததுவும்

சுவாச இடைவெளியின்
நீளங்கள் அளந்ததுவும்

காரியக் கவனத்தில்
மறதியை நுழைத்ததுவும்

சினத்தில் சுற்றமிருக்க - எனை
சிரிக்க வைத்ததுவும்

தாய்மொழி பயன்பாட்டில்
பிழைகள் இழைத்ததுவும்

ஊரே களித்திருக்க
தனிமைக்கு அழைத்ததுவும்

அக்றிணைகள் அனைத்துடனும்
உரையாட உந்தியதும்

அப்பாவி பெயரொழித்து
அடப்பாவி அளித்ததுவும்

புவியீர்ப்பு விசைமீறி
மிதக்க விட்டதுவும்

நின் நினைவன்றி நினைவன்றி
நிச்சயமாய் வேறென்ன..?

~2008~

No comments: