Monday, January 31, 2011

தீராக் கடன் !

என் பிறப்பின் ரகசியமே !

தன் படைப்பை ரசித்திட
குனிந்து குனிந்தே
விழுந்த கூனே !

எனக்கு நடை பழக்கிட
வளைந்த முதுகே!

என் சிரிப்பிற்கு
ஓயாது சம்பாதித்து
தள்ளாடும் கால்களே !

தீண்ட நினைத்து
நீண்ட கைகளின் நடுக்கமே!

இருமி இருமி
காலனை விரட்டும்
கடைசி முயற்சியே!

தன்பிள்ளை நம்பாது
கைத்தடி நம்பி
அங்குலம் அங்குலமாய்
நகர்கின்ற காலமே!

எனைப் போர்த்திய தோலின் சுருக்கமே....!
என் எதிர்கால உருவே...!

உன்னிடம் நான் பட்ட நன்றிக்கடன்
அடைப்பது எப்போது,
நீ எனக்கு செய்ததை
நானென் பிள்ளைக்கு செய்திட
ஓடுகிற வாழ்க்கையில்...!

~2004~

No comments: